குவித்த நற் கரங்களோடு
குவித்த நல் மனமோடு
குறித்த நாமம் சொல்லி குவித்த நல் மனமோடு
ஜெபிக்கும் ஜெய மாருதியே!
விண்ணே வியக்கும் வண்ணம்
விரித்த உடல் எடுத்தும்
இறை முன்னே பணிந்திடும்
இனிமையே சிவ மாருதியே!
இல்லாத வாழ்வு எனும்
இல்வாழ்வில் இலங்கும் எமை
நல்வாழ்வு வாழச் செய்யும்
நலமே ஜெய மாருதியே!
ஞாலம் சிறக்க வந்த
நல்லமுது மாருதியே!
நானும் சிறக்க வேண்டும்
நலமே அருள் மாருதியே!
என் ஊன மனதின்
உள் இருக்கும் கசடுகளை
ஊதித் தள்ளிட வா
உன்னில் எனை அள்ளிட வா!
- ராமா
No comments:
Post a Comment